கொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்,
உயர் நீதிமன்றம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்,
ஜனாதிபதி செயலகம்,
ஜனாதிபதி மாளிகை,
கடற்படைத் தலைமையகம்,
பொலிஸ் தலைமையகம்,
அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகம்,
கொம்பனி தெரு விமானப்படை தலைமையகம்,
மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம்,
கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்,
பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் இல்லங்கள் இவ்வாறு அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை, கொழும்பு